அன்று எங்கள் பொருளாதாரத்தில், அதுவும் உணவுப் பாதுகாப்புத் தொடர்பில் பண்டமாற்றம் பெரும் பங்கு வகித்தது. இந்தப் பண்டமாற்றின் அச்சாணியாகத் திகழ்ந்தவை பெரும்பாலும் மரங்களேயன்றி வேறல்ல.
தொடர் இடப்பெயர்வுகள், கிராமங்களிலே தன்னிறைவோடு வாழ்ந்த எம்மில் பலரை நகரங்களை நோக்கி இடம்பெயர வைத்துவிட்டன. காணிகளில் இருந்த பயன் தரு மரங்கள் பல டெங்கு பாதுகாப்பு என்ற பெயரில் அழிக்கப்பட்டன.
விவசாய உற்பத்தி முறைமைகளின் நிலைபேறான தன்மையை உறுதி செய்வதும் கூட இந்த மரங்களே!