எங்களது பௌத்தநூல் ‘தமிழ் பௌத்த’ நூலேயாகும். அதன்படி தென்னிந்தியாவில் வசித்த, வசிக்கிற தமிழ் பௌத்தர்களை நாம் இதுவரை சந்தித்துள்ளோம். மேலே குறிப்பிட்டுள்ளபடி தென்னிந்தியா அல்லது தமிழ்நாடு மாநிலம் தவிர இலங்கையிலேயே தமிழ் மக்கள் தொகை அதிகமாக உள்ளது. அவர்கள் மத்தியில் தமிழ் பௌத்தர்கள் இருக்கின்றனரா? இதற்கு பதில் சொல்வது எளிதான காரியம் அல்ல. ஏனெனில் ஸ்ரீ லங்காவில் தமிழ் பௌத்தம் பற்றிய பரிசோதனைகளும், ஆய்வுகளும், மிக அரிதானதாகவே காணப்படுகின்றன.