கடலை - வயிறு ஊத வைக்கும், அஜீரணத்தை உண்டாக்கி குடலை வலித்து மலம் போக்கும். மருந்தை முறிக்கும். ஆதலால் மருந்துண்ணுங்காலத்தில் கடலை உண்ணலாகாது. மருந்துக்கு அபத்தியமாகும். சோர்வையுண்டாக்குவதுடன் வாயுவையும் அதிகரிக்கும்.
கொள்ளானது குடல் வாதத்தையும் (குடல் முறுக்கல்) குன்மத்தையும் (வயிற்றுப்புண்) உண்டாக்கும். உட்கொள்ளும் மருந்துகளை முறிக்கும். பித்தம் அதிகரிக்கும். எனவே கொள்ளினை உடல்மெலிவுக்கென நீண்டகாலம் உட்கொள்ளும்போது மேற்படி உபத்திரவங்கள் ஏற்படலாம்