மகத்தான ஒக்ரோபர் புரட்சி (1917) ருஷ்யாவை "சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம்" என மாற்றிப் புனைந்து முழு உலக நாடுகளது மக்களுக்கும் நம்பிக்கை நட்சத்திமாசத் திகழ்ந்தது.
எழுபதாம் ஆண்டுகள் வரை விடுதலை நாடும் மக்களுக்குச் 'சோசலிசம்' என்ற கருத்தியல் உத்வேகமூட்டும் நிவாரணியாக இருந்தது. அநேகமான நாடுகள் 'ஜனநாய சோசலிச', 'சோசலிச ஜனநாயக' என்பதான அடைமொழிகளை ஒட்டி தம்மை அழகுபடுத்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆட்பட்டிருத்தன.